Saturday, January 08, 2005

எஸ்.பி.பாலசுப்ரமணியம்....






எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்.....
நளினம் கொஞ்சும் நந்தவனம்!

குயிலுக்குள் ஒளிந்திருக்கும் மயில்!

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல்....
காற்றின் மேடையிலே
நர்த்தன அற்புதம் நிகழ்த்தும்
ராக வசீகரம்!

- - -


எஸ்.பி.பாலசுப்ரமணியம்....
மாணிக்க கங்கையாய்
ரசிக மனங்களைப் பொங்க வைக்கும்
சங்கீத வரம்!

கற்கண்டு கொண்டு தூரிகை செய்து.....
அதைத் தேனிலே நனைத்தெடுத்து...
வான் அலைகளில் வரையப்படும்
ராக ஓவியம்!
- - -


எஸ்.பி.பாலசுப்ரமணியம்....

இசையமைப்பாளர்களின்
ராகத் தேரில் நின்றபடி ...
அவர்களே எதிர்பாராத
குயில் அற்புதங்களை
நிகழ்த்திக் காட்டும்
சித்த புருஷர்.....சிங்கார அரசர்!

-யாழ் சுதாகர்

LINK

RADIO PROGRAMMES OF YAZH SUDHAKAR